Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. பூக்கடைக்காரருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பூக்கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடராஜா நகரில் சுடலை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் ஆறுமுகநேரி பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சுடலை வியாபாரம் முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஜாரில் சாலையை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக சுடலை மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயமடைந்த சுடலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சுடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சுடலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆறுமுகநேரி காவல்துறையினர் விபத்திற்கு காரணமான வாகனத்தை ஓட்டிச் சென்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |