Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்!…. 2 நாட்களாக பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை…… நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

டெல்லியே சேர்ந்து 40 வயது பெண் கடந்த சனிக்கிழமை பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் சென்றுள்ளார். பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றிவிட்டு டெல்லி திரும்புவதற்கு இரவு காசியாபாத் பஸ் நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த பெண்ணை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரண்டு நாட்களாக அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள அந்தப் பெண் கொடூரமாக துன்பப்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து காசியாபாத்தின் ஆஷ்ரம் சாலை பகுதியில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டார்.

பிறப்புறுப்பில் இரும்பு கம்பி சொருக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் மீட்கப்பட்டுள்ளார். இந்த கொடூர செயலுக்கு உள்ளான அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவி தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளில் 4 பேரை கைது செய்தனர். மிஞ்சிய ஒருத்தரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கூட்டு பாலியல் செயலில் ஈடுபட்டு ஐந்து பேர் அந்த பெண்ணுக்கு பழக்கம் உடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இரும்பு கம்பி சுருக்கப்பட்டதாக மகளிர் ஆணைய கல்வி தெரிவித்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர். இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட கொடூரர்கள் ஐந்து பேருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கண்டன குரல் எழுந்துள்ளது.

Categories

Tech |