Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பட்டியலில் சேர்த்த அமெரிக்கா… “நாங்க அவங்கள மாதிரி இல்ல”… கண்டனம் தெரிவித்த இந்தியா!

சர்வதேச மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்ததற்கு அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது

சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்கா ஆணையம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் என நைஜீரியா, வடகொரியா, எரித்ரியா, இந்தியா, ஈரான், பர்மா, சீனா, ரஷ்யா, சிரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், வியட்நாம் என மொத்தம் 14 நாடுகளை பட்டியலிட்டுள்ளது. சர்வதேச மத சுதந்திர சட்டத்தின் கீழ் செயலாற்ற நிலைக்குப் பிறகு 1998 ஆம் ஆண்டு அமெரிக்க அரசால் நிறுவப்பட்டது தான் மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம். இதன் பரிந்துரைகள் வெளியுறவுத் துறைக்கு கட்டுப்படாதவை.

2004 ஆம் ஆண்டு முதல் வடகொரியா பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட 14 நாடுகள் உள்ள பட்டியலில் முதல் முறையாக இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. மேலும் அந்தப் பட்டியலுடன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட அக்கறை கொண்ட நாடுகள் என்று பரிந்துரைத்த அரசாங்கங்கள் திட்டமிட்டு மத சுதந்திரம் மீறல்களில் ஈடுபடுகின்றது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் துன்புறுத்தல் பற்றிய பிரச்சாரங்களுக்கு தண்டனை இல்லாத சூழலை அரசு உருவாக்கி வருகின்றது. மத சுதந்திரத்தை மீறியதால் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டு பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்.

2019ஆம் ஆண்டு மே மாதம் பாரதிய ஜனதா, பாராளுமன்றத்தில் ஆட்சி அமைத்ததும் இந்தியா முழுவதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக மத சுதந்திரத்தை மீறும் வகையில் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்த வருடம் பிப்ரவரி மாதம் டெல்லியில் 3 நாட்கள் வன்முறை நடந்துள்ளது. முஸ்லிம் பகுதிகள் தாக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை உள்துறை அமைச்சகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டு தாக்குதலை தடுக்க தவறியது மற்றும் நேரடியாக வன்முறையில் பங்கேற்றது போன்ற தகவல்கள் வந்துள்ளன எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்திய இதற்கு தரப்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது “இந்தியா குறித்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) ஆண்டு அறிக்கையில் வெளியிட்ட குற்றச்சாட்டுகளை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்தியாவுக்கு எதிரான ஒருதலைபட்சமாக கூறப்படும் கருத்துக்கள் புதிதல்ல. ஆனால் இந்த முறை அதன் தவறான கருத்து புதிய நிலைகளை சென்றுள்ளது. அந்த அமைப்பிற்கான கொள்கைகளில் அதற்கான கமிஷனர்களை கொண்டு செல்ல இயலவில்லை. நாங்கள் அதனை ஒரு குறிப்பிட்ட அக்கறை கொண்ட ஒரு அமைப்பாக தான் கருதி வருகிறோம். அதற்கேற்றார் போல் அதனை நாங்கள் நடத்துவோம்” என கூறி உள்ளார்.

இந்த ஆணையத்தில் இருக்கும் உறுப்பினர்கள் 9 பேரில் இருவர், இந்தியாவை பட்டியலில் வைக்க பரிந்துரை செய்ததில் கருத்துவேறுபாடு தெரிவித்துள்ளனர். மூன்றாவது உறுப்பினர் இந்தியா குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வட கொரியா, சீனா போன்ற சர்வாதிகார ஆட்சிகளை போன்று இந்தியா அல்ல. இந்தியா ஜனநாயக நாடு. இந்தியாவில் குடியுரிமை திருத்தச்சட்டம் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, சிவில் சமூகம் மற்றும் பல்வேறு குழுக்கள் முன் பகிரங்கமாக வைக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது என கமிஷனர் டென்ஜின் டோர்ஜி கூறினார்.

Categories

Tech |