Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உறவினர்களுக்கு இடையே நிலதகராறு…. குழாயால் அடித்த வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

நிலப் பிரச்சனை காரணத்தினால் கடை உரிமையாளரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கங்கா என்ற மனைவியும், சிதம்பரம் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் பங்காளி உறவு முறை உடைய கிருஷ்ணன் அவரின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், அன்பு மற்றும் உனேஷ் சென்ற இரு மகன்களும் உள்ளனர். அதன்பின் ரங்கநாதன் குடும்பத்தினருக்கும் கிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் இடையே நிலம் பிரச்சினை காரணத்தால் பல வருடங்களாக மோதல் இருந்து வந்துள்ளது.

தற்போது திடீரென ஏற்பட்ட நில பிரச்சனையால் அன்பு மற்றும் உனேஷ் ஆகிய இரண்டு பேரும் குழாயால் ரங்கநாதரை தாக்கியுள்ளனர். அதற்குப் பிறகு கிருஷ்ணவேணி மற்றும் கிருஷ்ணன் அவரை அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த ரங்கநாதனை மகன் சிதம்பரம் மற்றும் மனைவி கங்கா மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரங்கநாதன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர் அவர் இறந்தது அறியாமல் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில்  அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கங்கா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணவேணி, கிருஷ்ணன் மற்றும் இரண்டு மகன்கள் உள்பட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |