Categories
தென்காசி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிறுவர்கள் மீது தீண்டாமை…! குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை … ஐஜி அதிரடி உத்தரவு ..!!

பாஞ்சாகுளம் தீண்டாமை வழக்கில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் மாணவர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்ததாக வீடியோ ஒன்று வைரலான நிலையில், தற்போது அந்த வீடியோவில் தொடர்புடைய மகேஸ்வரன் உள்ளிட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் ஒரு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றம் புரியும்  குற்றவாளிகளை சில காலங்களுக்கு அந்த இடத்தை விட்டு வெளியேறக்கூடிய சட்டப்பிரிவை பயன்படுத்தி… வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள  குமார், மகேஸ்வரன், சுதா உட்பட ஐந்து பேர்   இந்த வழக்கு முடியும் வரை அந்த ஊரிக்குள் செல்லக்கூடாது என உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்கள்.

Categories

Tech |