Categories
உலக செய்திகள்

“220 கோடி பேருக்கு குடிநீர் இல்லை” ஐநா நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் …!!

உலகம் முழுவதும் 220 கோடி பேர் காதாரமான குடிநீர் வசதியின்றி தவிப்பதாக ஐநா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

பருவ மழை போதிய அளவு பெய்யாமல் இருந்ததால் இந்தியாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும்  தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகின்றது. மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் கடுமையாக அவதிப்படுகின்றனர். வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் வீதியெங்கும் அலைந்து திரிகின்றனர்.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனமும் , ஐக்கிய நாடுகள் சபையின்  குழந்தைகளுக்கான  யூனிசெப் அமைப்பும் இணைந்து ஆய்வு ஒன்றினை நடத்தியது.அந்த ஆய்வில் கடந்த 2000_ஆம் ஆண்டு முதல் 2017_ஆம ஆண்டு வரை  குடிநீர், சுகாதாரம் தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் உலகில் உள்ள 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீர் வசதியின்றி தவிப்பதாக வெளியாகியது.

Categories

Tech |