உலோக பொருள்களை விழுங்கி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தி உள்ளனர்.
ஐரோப்பிய நாட்டின் லிதுவேனியா நகரில் வசிக்கும் ஒரு நபர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் ஆம்புலன்ஸ் உதவியோடு Klaipeda பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இதனையடுத்து சிகிச்சையின் போது அவரது வயிற்றில் கிலோ கணக்கில் ஸ்க்ரூ, நட் முதலான உலோக பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக இதில் சில 10cm நீளத்திற்கும் இருந்தது மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அறுவை சிகிச்சை மூலம் உலோகங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இந்த வினோத வழக்கு குறித்து அறுவை சிகிச்சை நிபுணர் சருனாஸ் டைலிடெனாஸ் கூறியதாவது, “இது தனித்துவமான வழக்கு. இந்த நபர் சமீபத்தில் மது பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளார். அதன்பின் அவர் ஒரு மாத காலமாக உலோகப் பொருட்களை விழுங்கி வந்துள்ளார். இதனால் அவருடைய வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றிலுள்ள உலோகங்கள் அகற்றப்பட்டதை அடுத்து அவருடைய உடல்நிலையானது சீராக உள்ளது. மேலும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.