Categories
உலக செய்திகள்

“போர் முடியனுமா….!! அப்போ இதுதான் ஒரே வழி”…. தொடர்ந்து வலியுறுத்தும் இந்தியா….!!!

உக்ரைன்- ரஷியா போரின் முடிவுக்கு, இருதரப்ப உரையாடல் மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கையே  ஒரே வழி என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

உக்ரைன்- ரஷியா போரானது தொடர்ந்து 23வது நாளாக நீடித்து வரும் நிலையில்,  ஏவுகணை, வான்வெளி  மற்றும் பீரங்கி தாக்குதல்களை ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு பதிலடியாக உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதையடுத்து ரஷிய படைகளானது கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

அதே நேரத்தில் வடக்கு மற்றும் கீவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராடி வருகின்றன. மேலும் ரஷ்ய படைகள் கீவ் நகரை சுற்றி வளைக்க அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சார்பில், இந்தியாவின் துணை பிரதிநிதியான ரவீந்திரா உரையாற்றியது யாதெனில், “உக்ரைன்- ரஷியா பகையை நிறுத்தும் நோக்கில் நேரடி தொடர்பு மூலம் பேச்சுவார்த்தைகளுக்கு நாங்கள் அழைப்பு விடுத்து வருகிறோம்.

இதையடுத்து ரஷ்ய உக்ரைன் மோதல்களினால் இருதரப்பிலும் ஏற்படுத்திய மனித உயிரிழப்புகள் குறித்து இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனில் தீவிரமடைந்து வரும் இந்தப் போரினை உடனடியாக நிறுத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை அடுத்து இந்திய பிரதமர் அவசர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனாலும் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட உரையாடல் மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கை ஒன்றை தவிர போர் நிறுத்தத்திற்கான வழி வேறு இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவானது ஐநா சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் நாடுகளுக்கு இடையேயான இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு கோட்பாடுகளை மதிக்க வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்துகிறது. இதனை தொடர்ந்து பேசிய  அவர், சுமார் 22,500 இந்தியர்கள் இதுவரை பத்திரமாக தாய் நாடு திரும்பியுள்ளதாகவும்,  அவர்களை அழைத்து வரும் எங்களது முயற்சியில் ஆதரவளித்த அனைத்து நட்பு நாடுகளுக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

 

Categories

Tech |