உக்ரைன் வாழ் மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் அந்நாட்டை விட்டு வெளியேறும் காட்சியானது காண்போரை கண்கலங்க வைக்கிறது.
உக்ரேன் ரஷ்யா இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் உக்ரைன் வாழ் மக்கள் தங்களுக்கு தேவையான மற்றும் அவசியமான உடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு குழந்தைகளை கையில் பிடித்தபடி சாரை சாரையாய் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
மேலும் இவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு பல நூறு கிலோமீட்டர் நடந்தே செல்கின்றனர். இந்த நிலையிலும் உக்ரைன் நாட்டு மக்கள் தங்களுடைய வளர்ப்பு பிராணிகளை அங்கேயே விட்டு விட்டுச் செல்லாமல் தன்னுடன் எடுத்துச்செல்வது அவர்களின் மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டு மக்கள் வெள்ளை எலிகள், முயல்கள், பறவைகள், பூனைகள் மற்றும் நாய்கள் என அனைத்து வளர்ப்பு பிராணிகளையும் எடுத்துச்செல்லும் காட்சியானது காண்போரை கண்கலங்க வைக்கிறது.