Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளால் கடத்தி கொல்லப்பட்ட மேயர்…. இறுதியாக மக்களுக்கு தெரிவித்த தகவல்…!!!

உக்ரைனில் ஒரு பெண் மேயரை, ரஷ்ய படைகள் கடத்திக் கொலை செய்த நிலையில் கடைசியாக அவர் கிராம மக்களுக்கு தெரிவித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

உக்ரைன் நாட்டின் Olga Sukhenko என்ற மேயரை ரஷ்ய படைகள் கடத்திச்சென்று கொலை செய்தனர். அதன்பிறகு, அவரின் உடலை, அவரது கணவர் மற்றும் மகன் சடலங்களுடன் ஒரு பள்ளத்தில் கண்டறிந்துள்ளார்கள். ரஷ்ய படையினர் Olga Sukhenko-ஐ அவரின் வீட்டிலிருந்து  குடும்பத்தினருடன் கடத்தி சென்று கொலை செய்து வனப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளத்தில் சடலத்தை வீசி சென்றிருக்கிறார்கள்.

இந்நிலையில், அவர்கள் கடத்துவதற்கு முன்பாக தன் கிராமத்தில் உள்ள மக்களுக்கு முகநூல் தளத்தில் அவர் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதில், அன்பான குடியிருப்பு வாசிகளே, நம் பகுதியை குப்பைகள் ஆக்கிரமித்திருப்பதை உணருகிறேன். கவனமுடன் இருங்கள், உங்கள் வீட்டிலிருந்து வெளியே வராதீர்கள். அமைதியை கடைபிடிப்போம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |