கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் பல திரைப் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொது நிவாரண நிதிக்காக நன்கொடை வழங்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்று தமிழ் சினிமாவின் நடிகர் சிவகுமார் தனது குடும்பத்தின் சார்பாக 1 கோடி நிதியுதவி கொடுத்துள்ளார். இதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சந்தித்து கொரோனா தடுப்பு பணிக்காக 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ வாகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதேபோல் பலர் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்கி உதவி செய்து வருகின்றனர்.