இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதுகாணபள்ளி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மீது காவல் நிலையங்களில் இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. கடந்த 3 மாதமாக சந்தோஷ்குமார் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த சிறுமி சந்தோசை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ்குமார் அங்கு விரைந்து சென்று மாணவியை சந்தித்து பேசியுள்ளார். அதன்பிறகு பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் குடும்பத்தினருக்கும், சந்தோஷ்குமார் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த சந்தோஷ்குமார் அந்த மாணவியின் அண்ணன் மற்றும் அவருடன் இருந்தவர்களை தனது நண்பர்களுடன் இணைந்து கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் காயமடைந்த 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தோஷ் குமார் உட்பட 8 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.