விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடத்தில் விமான தளத்துக்கு மிக அருகிலேயே திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 விமானிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றுசொல்லப்படுகிறது.
முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டு தலைநகர் அல்ஜியர்சில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இருந்து ராணுவவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் விமானம் ஓன்று புறப்பட்டு சென்றது. புறப்பட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 257 பேரும் இறந்து போனது குறிப்பிடத்தக்கது.