Categories
தேனி மாவட்ட செய்திகள்

Breaking News : மின்கசிவால் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து …… இரண்டு பேர் காயம்….!!

தேனியில் தனியார் எண்ணெய் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதையடுத்து  தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து அணைக்க முயற்சித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் கருணாகரன் என்ற தனியார் எண்ணெய் ஆயில் நிறுவனம் இயங்கி வருகின்றது . இரவு வேலைக்காக 10_ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று பணியில் இருந்து வந்தனர். அப்போது தீடிரென ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்ததால் தீயின் வேகம் மளமளவென பரவியது .  இந்த தீ விபத்தில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது.

Image result for தீ விபத்து

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.காற்றின் வேகத்தின் அதிகரிப்பால் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் தீயை கட்டுபடுத்த ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் பகுதியில் இருந்து தீயணைப்பு படை வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் . அவர்களும் விரைவில் வந்து கொண்டிருக்கின்றன. தீ விபத்தில் காயமடைந்த 2 பேரையும் 108 ஆம்புலன்சில் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.தொடந்து தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Categories

Tech |