ரஷ்யாவில் போராட்டத்தை தூண்டும் வகையில், ட்விட்டரில் பதிவு இருந்ததால் ட்விட்டர் நிறுவனத்திற்கு ரஷ்யா ரூபாய் 85 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ரஷ்ய அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில், சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் இருந்தால் ,அந்த சமூக வலைத்தளங்களை தடை பட்டியலில் சேர்க்கப்படும் என்ற சட்டத்தை ரஷ்யா அமல்படுத்தியது . அன்று முதல் ரஷ்ய அரசாங்கம் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருகிறது. அதன்படி இந்த வருட தொடக்கத்தில் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நவால்னியை கைது செய்ததற்காக ,நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ட்விட்டர் நிறுவனம் பொய்யான செய்திகளை பதிவிட்டதற்காகவும், நடந்த போராட்டத்திற்கு சிறுவர்களும் பங்குபெறுமாறு அழைப்பு விடுக்கும் வகையிலும் ,ட்விட்டர் நிறுவனத்தின் பதிவு இருந்ததாக ,ரஷ்ய அரசாங்கம் கூறியுள்ளது. இதனால் ட்விட்டர் நிறுவனம் மீது ரஷ்ய அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கானது நேற்று முன்தினம் ,நடத்தப்பட்ட இறுதி விசாரணையில் ,குற்றம் சாட்டப்பட்ட ட்விட்டர் நிறுவனத்தின் மீது ,நடத்தப்பட்ட விசாரணையில் அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளது . இதனால் நீதிபதி ட்விட்டர் நிறுவனத்திற்கு அமெரிக்க டாலரின் மதிப்பில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் ,அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 85 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் விதிக்குமாறு தீர்ப்பளித்தார்.