எழுத்தாளர் திரு.சோ.தர்மனுக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சோ. தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். எழுத்தாளரான இவருக்கு தமிழில் சிறந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு நூல்களை எழுதியுள்ளார் சோ தர்மன்.
விருது வழங்கப்பட்டது குறித்து பேசிய சோ. தர்மன், சாகித்ய அகாடமி விருது அறிவித்து மத்திய அரசு அங்கீகாரம் கொடுத்தது மிகப் பெரிய மகிழ்ச்சியளிக்கிறது. நான் நடிகன் அல்ல நான் ஒரு எழுத்தாளர் சூரியகாந்தி பூ போல இல்லாமல் மூலிகை போல் இருப்பேன். எந்த விளம்பரமும் இல்லாமல் பணியாற்றி வருகிறேன் அங்கீகாரமும் கிடைத்து கொண்டுதான் இருக்கிறது என்று தெரிவித்தார். விருது அறிவிக்கப்பட்ட சோ. தர்மனுக்கு முதல்வர் பழனிசாமி, முக ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் தமிழகத்தின் கரிசல் இலக்கிய படைப்பாளிகளில் முக்கியமானவரான எழுத்தாளர் திரு.சோ.தர்மன் அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீர்நிலையை மையமாக வைத்து, மன்னராட்சி காலத்தில் இருந்து மக்களாட்சி காலம் வரை கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த அவரது ‘சூல்’ நாவலுக்கு இவ்விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காலங்களைக் கடந்து நிற்கும் இலக்கியங்களைத் தொடர்ந்து படைத்திட அவரை வாழ்த்துகிறேன்.
நீர்நிலையை மையமாக வைத்து, மன்னராட்சி காலத்தில் இருந்து மக்களாட்சி காலம் வரை கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த அவரது 'சூல்' நாவலுக்கு இவ்விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காலங்களைக் கடந்து நிற்கும் இலக்கியங்களைத் தொடர்ந்து படைத்திட அவரை வாழ்த்துகிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 19, 2019