12 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் வருவாய் துறையில் பணிபுரியும் தாசில்தார்களை அதிரடி பணியிட மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் திருப்பூர் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கிடங்கு பதவிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலக தேர்தல் தாசில்தாராக இருந்த ரவீந்திரன் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் கலெக்டர் அலுவலக தேர்தல் தனிதாசில்தாராக, தாராபுரம் கோட்ட கலால் அதிகாரியாக இருந்த முருகதாஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உடுமலை தாசில்தாராக இருந்த ஜெய்சிங் சிவகுமார் திருப்பூர் வடக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், உடுமலை தாசில்தாராக தாராபுரம் தாசில்தார் ராமலிங்கம் என்பவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஊத்துக்குளி தாசில்தாராக ஊத்துக்குளி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக இருந்த கலாவதியும், அவினாசி தாசில்தார் பதவிக்கு ஊத்துக்குளி தாசில்தாராக இருந்த தமிழ்ச்செல்வன் என்பவரும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதனைதொடர்ந்து உடுமலை குடிமைப்பொருள் தனி தாசில்தாராக மடத்துக்குளம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக இருந்த தயானந்தன் என்பவரும், உடுமலை ஆர்.டி.ஓ-வின் நேர்முக உதவியாளராக உடுமலை குடிமைப்பொருள் தனிதாசில்தாராக இருந்த விவேகானந்தன் என்பவரும் பணி இடம் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் மடத்துக்குளம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பதவிக்கு உடுமலை சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக இருந்த கணேசன் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவினாசி தாசில்தாராக இருந்த ஜெகநாதன் திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும், திருப்பூர் வடக்கு தாசில்தாராக இருந்த பாபு திருப்பூர் தெற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தாராபுரம் தாசில்தார் பதவிக்கு திருப்பூர் தமிழ்நாடு மாநில வாணிப கழக கிடங்கு மேலாளராக இருந்த ரவிச்சந்திரன் என்பவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.