கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட ரயில் சேவையானது சுமார் 11 மாதங்களுக்கு பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு துவங்கியுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறும்போது, காஷ்மீரின் ரயில்சேவை இயக்கமானது எளிமையை மேம்படுத்துவதோடு, சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என கூறியுள்ளார். இதனையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ரயில்வே துறையானது சுமார் 11 மாதங்களுக்கு பிறகு ரயில் சேவையை துவங்கியுள்ளதாகவும், பனிகல்-பாரமுல்லா இடையே இந்த சேவையானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ரயில் சேவையானது கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் எப்போது தொடங்குவது என்பதற்கான உறுதியான தேதியை நிர்ணயிக்காமல் இருந்ததாகவும், இப்போது ரயில் சேவை அதிகரிக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 65 சதவீத ரயில் சேவை இயங்கி கொண்டிருக்கும் நிலையில், ஜனவரி மாதத்தில் மட்டும் 750 ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அதோடு ரயில்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகப்படுவதுடன், முன்பதிவு முறையில் சிறப்பு ரயில்களாக அவை இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதன் பின்அனைத்து வழக்கமான ரயில் சேவைக்கான தடையானது மார்ச் 25ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.