Categories
மாநில செய்திகள்

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சேலம் ரயில் நிலையத்தில் தற்போது பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை சேலம், நாமக்கல், கரூர் வழியாக இயங்கும் அனைத்து ரயில்களையும் ரத்து செய்யப்படுகிறது. இதனை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் அன்றைய தினம் விரைவு ரயில்கள் மாற்று பதில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் இயங்கும் தினசரி ரயில்கள் சென்னை சென்ட்ரல்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக இயங்கும்.

அதனைப் போல பெங்களூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சேலம், ஈரோடு, கரூர் வழியாக இயங்கும் என்றும் இந்த ரயில்கள் 3 நாட்களுக்கு நாமக்கல் ரயில் நிலையம் வராது. இதனையடுத்து டிசம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை எங்க ஓகோ – ராமேஸ்வரம் வராந்திர ரயில், சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் வாராந்திர ரயில், தாதர் – திருநெல்வேலி ஆகிய வாராந்திர ரயில்களும் சேலம், ஈரோடு, கரூர் வழியாக இயங்கும் என்று தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |