Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென வந்த சரக்கு ரயில்… வாலிபருக்கு நேர்ந்த சோகம்… விசாரணையில் ரயில்வே போலீஸ்…!!

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் சரக்கு ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ஆம்பூர் ரயில் நிலையத்தின் அருகே இருக்கும் யார்டு பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் ஜோலார்பேட்டை நோக்கி வந்த சரக்கு ரயில் அருண்குமார் மீது மோதியதில் அருண்குமார் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |