Categories
மாநில செய்திகள்

கொண்டாடப்பட்ட போகி பண்டிகை… மகிழ்ச்சியில் பொதுமக்கள்… புகை சூழ்ந்த நகரம்…!!

வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய போது உண்டான புகை மூட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்பதற்கேற்ப போகிப் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி அதற்கு தீ வைத்து கொளுத்தியும், அங்குள்ள சிறுவர்கள் அனைவரும் மேளம் அடித்தும் போகிப்பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். மேலும் அதிகாலை வேளையில் இந்த பழைய பொருட்களை எரித்ததால் பனி மூட்டத்துடன் புகையும் சேர்ந்து காற்று மாசுபட்டு ஏற்பட்டது.

அதோடு பொருட்களை எரித்த புகை, பனிமூட்டத்தோடு ஒன்று சேர்ந்ததால் அதிகாலையில் கூட வாகனங்கள் தெரியாவண்ணம் புகைமூட்டம் சூழ்ந்திருந்தது. மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் கொண்டாடப்படும் போகி பண்டிகையிலிருந்து வரும் புகையால் வாகங்கள் செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு போக்குவரத்து தடை ஏற்ப்பட்டது.

Categories

Tech |