நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண் எழுத்தாளர் டோனி மாரீசன் உடல்நலக் குறைவால் காலமானார்.
அமெரிக்காவில் உலக புகழ் பெற்ற கருப்பின பெண் எழுத்தாளர் டோனி மாரீசன் Beloved, Song of Solomon போன்ற பல்வேறு புத்தகங்கள் எழுதி நோபல் பரிசு பெற்றார். டோனி மாரீசன் எழுதிய சுதந்திர வேட்கை, இனவிடுதலை போன்றவை பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தனது 40 வயது முதல் புத்தகத்தை எழுதி வந்த நிலையில் அடுத்தடுத்து எழுதிய ஆறு நாவல்களால் பெரும் புகழ் பெற்றார். இவர் தற்போது 88 வயதில் நியூயார்க்கில் உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பதிப்பாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கருப்பின மக்களுக்கான தனி மொழியை தமது இலக்கியப் படைப்பில் உருவாக்க முயற்சித்தவர் என்றும் அமெரிக்க கலாச்சாரத்தை உலகிற்க்கு உரக்க தெரிவித்தவர் என்றும் புகழாரம் சூட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.