திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருக்கின்றது.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் முறைகேடாக ஆளுங்கட்சி செயல்பட்டதாகவும் , ஜெயலலிதா சுயநினைவுவில் இல்லாத நிலையில் கையெழுத்தில் சர்சை போன்ற காரணங்களை முன்வைத்து வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணை முழுவதும் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . வழக்கின் நிலுவையை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் திருப்பரங்குன்றம் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலேயே அதிமுக MLA போஸ் இறந்துவிட்டார் . மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு விசாரணை முடிந்து ஓராண்டு காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தலை அறிவிக்கப்படவில்லை . எனவே இந்த வழக்கின் தீர்ப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார் . இந்த மனுதாக்கல் கடந்த (18.03.19 ) காலை விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமைக்குள் பிறப்பிக்கப்படும் என்று நீதிபத்தி உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.