Categories
தேசிய செய்திகள்

இன்று தான் கடைசி நாள்…” இன்னைக்கு கட்டலனா”… 10,000 அபராதம்..!!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா காரணமாக 2019-20 ஆம் நிதியாண்டு அபராதம் இன்றி  கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் மாதம் வரை வழங்கப்பட்டது. மீண்டும் இந்த அவகாசம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகள் தாக்கல் செய்ய இன்று பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இன்றுடன் அந்த அவகாசம் நிறைவடைகிறது. வரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்று அபராதம் இன்றி  கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று வரை நீடிக்கப்பட்டது. இன்று வரை அபராதம் இன்றி  கணக்கு தாக்கல் செய்ய முடியும் என்றும், இன்று கணக்கு தாக்கல் செய்யாத 5 லட்சத்துக்கு மேல் வருவாயை ஈட்டுவோர் 10,000 செலுத்தி நாளை முதல் கணக்கு தாக்கல் செய்யலாம். வருகிற மார்ச் 31ம் தேதிக்கு பின் கணக்கு தாக்கல் செய்ய முடியாது. மேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |