பத்ம விருதுகளை குறித்த மனுக்களை அரசு வெளியிட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
உலக அளவிலான, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் பெருமைமிகு விருதுகளாக கருதப்படுகிறது.1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்பட்டு வழங்கப்படும். அந்த வகையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, 2021-ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் போது வழங்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான மனுக்கள் மற்றும் அவற்றிற்கான, பரிந்துரைகளை இன்று வரை சமர்ப்பிக்கலாம்.
அதுமட்டுமில்லாமல், பத்ம விருதுகளுக்கான இணையதளத்தை அரசு வெளியிட்டுள்ளது. அந்த இணையத்தளமானது “https://padmaawards.gov.in/” இதில் மட்டுமே மனுக்கள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படும். மேலும் இத்தகைய சிறப்பு மிகுந்த பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வந்த நபர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது.