Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடையில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுகுறிச்சி வீதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளரான கிருஷ்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதேபோன்று மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக ஆகாஷ் என்ற வாலிபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 7 1/2 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |