Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு: கடைசி நாள் அறிவிப்பு…. குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான முதல் கட்ட தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வானது பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள்  தங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். குரூப்-2 முதன்மை தேர்வு எதிர்கொள்வோர் தங்கள் அசல் சான்றிதழ்களை அப்லோட் செய்ய டிச., 16 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 21ல் நடைபெற்ற இந்த தேர்விற்கான முடிவுகள், நவ.,ல் வெளியானது.

இதையடுத்து தேர்வானவர்கள் முதன்மை தேர்விற்கான தங்கள் அசல் சான்றிதழ்களை அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவன இணைய சேவை மையங்களுக்கு (காலை 8 முதல் இரவு 8) சென்று அப்லோட் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |