Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூன்றாம் கட்ட கலந்தாய்வு வருகின்ற 25 ஆம் தேதி சென்னை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சான்றிதழ் மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அழைப்பு ஆணை தபால் மூலம் அனுப்பப்படாது என்றும் பங்கேற்க தவறினால் மறு வாய்ப்பு வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது

Categories

Tech |