Categories
மாநில செய்திகள்

TN TRB 2022 தேர்வர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு….. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வு கிட்டத்தட்ட தமிழக முழுவதும் 190 மையங்களில் நடைபெற்ற நிலையில் 2.30 லட்சம் பேர் தேர்வு எழுதினர் . அந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் தமிழ் வழி சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் தேர்வு வாரிய உத்தரவிட்டது.

அதே சமயம் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் பணி நாடுனவர்களுக்கு நேரடி நியமன கலந்தாய்வு வருகின்ற அக்டோபர் 13ஆம் தேதி அதாவது இன்று  நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பட்டியலில் உள்ளவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட கடிதம் மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் நேரடியாக வரவேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இந்த கலந்தாய்வு சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |