Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் வன விலங்குகள் நடமாட்டம்…. இரவு நேரங்களில் மக்கள் எச்சரிக்கை…!!

 திருப்பதியில் பக்த கோடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் வனவிலங்குகள் நடமாடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக திருப்பதியின் தரிசனத்திற்கு வரும் பக்த கோடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்த கோடிகள் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர். அதனால் ஏழுமலையான் கோவில் சார்ந்துள்ள பகுதிகளில் மட்டும் குறைந்த அளவில் பக்தர்கள் நடமாடி வருகின்றன.

திருப்பதியின் முக்கிய பகுதிகளான பாபவிநாசம், ஆகாசகங்கை, ஜாபாலிதீர்த்தம், ஸ்ரீவாரி பாதாளு  உள்ளிட்ட பகுதிகளுக்கு பக்தர்கள் செல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் திருப்பதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வனப் பகுதிகளை விட்டு விலங்குகள் வெளியே செல்ல தொடங்கியுள்ளது. பாலாஜி நகர் பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடிய தாகவும், அதனைப் பார்த்த மக்கள் அச்சமடைந்த சத்தமிட்டால் சிறுத்தை அந்த இடத்திலிருந்து காட்டுக்குள் ஓடியதாகவும் வனத்துறையினரிடம் மக்கள் புகார் அளித்துள்ளனர்.

தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து அப்பகுதி முழுவதும் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன்பின் இரவு நேரங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தி சென்றனர். இதனால் திருமலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வர வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |