Categories
தேசிய செய்திகள்

அடடே! இது சூப்பர் ஐடியாவா இருக்கே… இதுதான் பச்சை மேஜிக்கா… புது முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

துளசி விதைகளுடன் கூடிய புதிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறையை திருப்பதி தேவஸ்தானம் துவங்கியுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பிரசாதங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பாலிதீன் பைகளில் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு பாலிதீன் பைகள் நிறுத்தப்பட்டு துணிப்பைகளில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு புது முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அதாவது பசுமையை போற்றும் வகையில் துளசி இலைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறையானது துவங்கப்பட்டுள்ளது. இந்த காலியான பைகளை மண்ணில் போடும் போது அதில் இருக்கும் துளசி விதைகள் செடிகளாக வளர்கின்றன. மேலும் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பச்சை நிறத்தில் உள்ள இந்த பைகளை பச்சை மேஜிக் பைகள் என்று அழைக்கின்றனர். இந்த புதிய முயற்சியை அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.

 

 

Categories

Tech |