ராணிப்பேட்டையில் ஏரி மண்ணை கடத்திய 3 டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தினுடைய சப்-இன்ஸ்பெக்டரான வசந்த் தலைமையிலான காவல்துறையினர்கள் பாகவெளி பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஏரி வழியே வந்து கொண்டிருந்த 3 டிராக்டரை காவல்துறையினர் மடக்கினர்.
இதனையடுத்து காவல்துறையினரை கண்டதும் டிராக்டரை ஓட்டி வந்த நபர்கள் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். அதன்பின் காவல்துறையினர் வண்டியை சோதனை செய்ததில் அவர்கள் ஏரி மண்ணை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் 3 டிராக்டர் வண்டிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.