தினமும் தேவைப்படும் ஒரு சில அற்புத குறிப்புகள்…
சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும் விரைவில் தழும்புகள் மறையும்.
துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
பல் வலி குறைய துளசி இலை சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும், உடனே வலி குறையும்.
காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். இப்படி சில மாதங்களுக்கு தொடர்ந்து இதை செய்தால் உடல் எடை குறையும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனை கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும், காய்ச்சல் குறையும்.
வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
காரட் மற்றும் தக்காளிச் சாறு ஆகியவற்றுடன் கொஞ்சம் தேன் கலந்து கொடுத்தால் இருமல் நிற்கும்.