Categories
உலக செய்திகள்

டிக் டாக் நிறுவனத்தின் ஒப்பந்தம்…அமெரிக்கா அதிபர் கருத்து…!!!

டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு  பலன் தரும் வகையில் இருக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில்  ‘பேஸ்புக்’-குக்கு பின்னர்  ‘டிக்-டாக்’ மிகவும் பிரபலமானது. அந்த செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். சீனாவில் உருவாக்கப்பட்ட ‘டிக்-டாக்’ செயலியால் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. சீனா, இந்த டிக்டாக் செயலி மூலம் உளவு பார்க்க முயற்சி செய்வதாக  அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டி கொண்டிருக்கிறது. அனால் தங்கள் நிறுவன செயல்பாடுகளில் சீன அரசின் எந்த பங்கும் இல்லை என டிக் டாக் நிறுவனம் கூறியுள்ளது.

இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா,தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி  டிக் டாக் நிறுவனத்திற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதம்  15ஆம் தேதிக்குள்  டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கும் உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

தடையை தவிர்க்க கூடிய விதத்தில், டிக் டாக் நிறுவனம் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திகொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க நிறுவனத்துடன் விற்பனை செய்ய, டிக் டாக்  செய்து கொள்ளும் ஒப்பந்தம், அமெரிக்காவுக்கு நீண்ட பலன் அளிக்கக்கூடிய வகையிலும் முழு பாதுகாப்பு அளிக்கக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

Categories

Tech |