Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் பெய்த கனமழை…. குடிசையின் வாசலில் நின்ற தொழிலாளி…. பின் நேர்ந்த சோகம்….!!

மின்னல் தாக்கியதில் செங்கல் சூளை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வைரவன் கோட்டை கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் காளிதாஸ் என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென கனமழை பெய்துள்ளது. அந்த சமயத்தில் குடிசையின் வாசலில் நின்று கொண்டிருந்த காளிதாஸ் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அப்போது அருகில் இருந்த அவருடைய பேரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வேட்டைகாரணிருப்பு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளிதாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |