கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் இந்த சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்ராம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உணவு தயாரிக்கும் மையம் இயங்கி வந்துள்ளது. இங்கு கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் பாக்யராஜ், ஆறுமுகம் மற்றும் முருகன் போன்ற 3 தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி அவர்கள் இறந்து விட்டனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சோமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனை அடுத்து அந்த இடத்தின் உரிமையாளரான கோவில்பட்டி பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணராஜ் என்பவரையும், அங்கு உணவு தயாரிக்கும் மையம் நடத்தி வந்த ஆவடியில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவரையும் சோமங்கலம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.