Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அதுக்கு போய் இப்படி பண்ணலாமா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு நிதிஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிதிஷ்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் நிதீஷ்குமாரின் மனைவி அவரை கண்டித்துள்ளார்.

இதனையடுத்து மனமுடைந்த நிதிஷ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிதிஷ்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |