Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பேயன்விளை பகுதியில் முருகையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் முருகையா அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகையா வீட்டின் அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகையாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |