தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் முப்புடாதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரபுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பிரபுவின் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரபு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் இது குறித்து வள்ளியூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வள்ளியூர் காவல்துறையினர் பிரபுவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.