தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆதியூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் முதல் மகள் திருப்பூரிலும் 2-வது மகள் ஈரோடு மாவட்டத்திலுள்ள திங்களூரிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மூத்த மகளுக்கு குழந்தைகள் இல்லாததால் தனது தந்தை வீட்டிற்கு மூத்த மகள் அடிக்கடி வந்து விடுவார். இதனால் மனவேதனை அடைந்த கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி மது குடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது மூத்த மகளின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அதிகமாக மது குடித்துள்ளார்.
இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தியின் மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடக்கும் விசேஷத்திற்கு சென்றிருந்தார். அதன்பின் விசேஷம் முடிந்து வீட்டிற்கு வந்த அவருடைய மனைவி குளியலறைக்கு சென்று பார்த்த போது கிருஷ்ணமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அவருடைய மனைவி கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் கிருஷ்ணமூர்த்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.