Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டில் வந்த துர்நாற்றம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கதிர்வேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கதிர்வேலின் வீட்டில் கடந்த 18 – ஆம் தேதி துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினர் விக்ரமசிங்கபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கதிர்வேலின் வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது கதிர்வேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கதிர்வேலின் சடலத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |