கேரளாவில் மதம் சமந்தப்பட்ட அமைப்பிற்கு கற்று கொடுத்த தீயணைப்பு துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.
கேரளாவில் இந்தியா அமைப்பு சார்பில் புதிதாக பாப்புலர் பிராண்ட் ஆப் எனப்படும் மீட்பு மற்றும் பாதுகாப்பு படை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு எர்ணாகுளத்தில் அடுத்த ஆலுவாவில் மாநில அளவிலான தொடக்க விழா நடைபெற்றது. இந்த அமைப்பில் ஆபத்தான காலம் மற்றும் பேரிடரில் சிக்கியவர்களை மீட்பதற்கான கேரளா தீயணைப்பு படை சார்பில் பயிற்சி அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து மத, அரசியல் அமைப்பினருக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று கேரளா தீயணைப்பு மற்றும் மீட்பு பணி தலைமையில் உயர் அதிகாரி பி சந்தியா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு பயிற்சி அளித்தாக எர்ணாகுளம் வட்டம் தீயணைப்பு படை மற்றும் மாவட்டம் தலைமை அதிகாரி, தீயணைப்பு படை வீரர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பி.சந்தியா கேட்டுக்கொண்டார். இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தீயணைப்பு படை மற்றும் மாவட்ட தலைமை அதிகாரிகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். மேலும் மற்றவர்கள் மீது துறை ரீதியாக இடமாற்றம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிற்பார்கபடுகிறது.