Categories
உலக செய்திகள்

தொடர் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்…. குறி வைத்த ராணுவம்…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த இராணுவத்தளபதி….!!

அல் சபாப் இயக்கத்தை சேர்ந்த 15 தீவிரவாதிகளை சோமாலிய நாட்டு இராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

சோமாலியாவில் அல் சபாப் இயக்க தீவிரவாதிகள் அங்குள்ள பல கிராம பகுதிகளுக்கு சென்று தாக்குதல் நடத்தி வந்தனர். மேலும் அவர்கள் கண்ணிவெடிகளை  மண்ணில் புதைத்து வைத்தும் தாக்குகின்றனர். இதனால் சோமாலியா நாட்டு ராணுவம் அல் சபாப் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளை சில மாதங்களாகவே தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சோமாலியாவில் மடபான் மாவட்டத்திலுள்ள மதூய் கிராமப்பகுதியில் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளை குறிவைத்து அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 15 திவிரவாதிகள சுட்டு கொல்லபட்டதாக அந்நாட்டு இராணுவத்தளபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Categories

Tech |