ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் இளைஞர் உள்பட 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வின்சென்ட் ராஜா(27) மற்றும் கீழக்கரையை சேர்ந்த சாகுல்ஹமீது(45) ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் பல்வேறு குற்றங்களில் செயல்கள் செய்து வந்துள்ளதால் 2பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் சந்திரகலா சாகுல்ஹமீது மற்றும் வின்சென்ட் ராஜாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அந்த 2 பேரையும் காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.