Categories
தேசிய செய்திகள்

“தனியார் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வூதிய வயது இதுதான்”…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பஞ்சாப் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணி புரியும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 65 என நிர்ணயித்துள்ளது. இதே வயது தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் ‌ என கூறி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வூதிய வயதை நிர்ணயிக்கும் பல்கலைக்கழகம் மானிய குழுவின் உத்தரவு தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கங்களுக்கு பொருந்தாது என்றார். மேலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய வயது 60 தான் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

Categories

Tech |