Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தப்பு செய்தால் இது தான் தண்டனை… உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்… 3 பேரை மத்திய சிறையில் அடைத்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் காவல்துறையினர் ஓர்ந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கடம்பங்குளம் விலக்கு சாலையில் சிலர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களை பிடித்து சோதனை செய்த போது பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த மேலக்கன்னிசேரி பகுதியை சேர்ந்த அருண்குமார், இளையாங்குடி பகுதியை சேர்ந்த சோலைராஜா சுரேஷ்(35) புளியன்குடியை சேர்ந்த கந்தன் தமிழரசன்(36) உள்பட 9 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 9 அரிவாள்கள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சோலைராஜா சுரேஷ் மற்றும் கந்தன் தமிழரசன் மீது ஏற்கனவே பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவர்கள் இருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் மாவட்ட ஆட்சியர் சசிகலாவிற்கு பரிந்துரை செய்துள்ளார். இதேபோல் ரமந்தபுரம் சின்னஆனையூரை சேர்ந்த அழகுராஜா(24) மற்றும் அவரது நண்பர் சக்திமுருகன் கடந்த மாதம் மேலக்கன்னிசேரிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன்(24) மற்றும் அஜித்குமார்(21) ஆகிய இருவரும் அழகுராஜா ஒரு சாதி தலைவரின் படம் போட்ட சட்டையை அணிந்திருந்ததால் அவர்களை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து அழகுராஜா மற்றும் அவரது நண்பர் சக்திமுருகன் பேரையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் நாகேந்திரன் மற்றும் அஜித்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அஜித்குமாருக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சூப்பிரண்டு அதிகாரி பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் கந்தன் தமிழரசன், சோலைராஜா சுரேஷ் மற்றும் அஜித்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |