ஐநா பாதுகாப்பு கவுன்சில் மாதாந்திரக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க பட மாட்டாது என்று தற்காலிக பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான கிரியாஸ் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் தூதரான கிரியாஸ் நவம்பர் மாதத்திற்கான தற்காலிக பாதுகாப்பு கவுன்சிலிங் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பற்றி விவாதம் ஏதும் நடைபெறாது என்று தெரிவித்த அவர், ஜம்மு விவகாரத்தை ஏற்கனவே விவாதித்து விட்டதாகவும், அது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எந்த நாடு கோரிக்கை விடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தின்போது பாகிஸ்தான் மற்றும் சீனா முறையை அடுத்து பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளும் விவாதித்தனர். இந்த விவகாரம் இந்தியா பாகிஸ்தான் இடையிலான பிரச்சனை என்று பெரும்பாலான நாடுகள் கருத்து தெரிவித்ததையடுத்து இது தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.