வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யா மற்றும் சிம்பு ஆகியோர் நடிப்பில் அசத்தி இருந்தனர். மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி அடைந்தது.
இதனைய,டுத்து இவர் புதிதாக தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதுதான் இவரின் முதல் தெலுங்கு படமாகும். இந்நிலையில், இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.