குழந்தையை கவனிப்பது தொடர்பாக வந்த சண்டையில் மனைவி தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் சம்சு – சல்மா சுல்தானா. இவர்களுக்கு 3 வயதில் முகமது சுகன் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. சம்சு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுகனுக்கு கண் பார்வைக்கோளாறு இருப்பதால் இத்தம்பதிகளுக்கிடையே அடிக்கடி, குழந்தையை கவனிப்பது தொடர்பாக சண்டை வந்துள்ளது.
இதையடுத்து சம்பவத்தன்று நள்ளிரவும் இது தொடர்பாக மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சல்மா சுல்தானா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மெட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.