Categories
உலக செய்திகள்

ரூ. 1,24,10,91,33,09,800…!! ”சீனாவிடம் கேட்டு பீல்” அனுப்பிய ஜெர்மனி ……!!

தங்களுக்கு இழப்பீடு தொகை தரவேண்டும் என 149 பில்லியன் யூரோக்களை கேட்டு ஜெர்மனி சீனாவுக்கு பில் அனுப்பியுள்ளது

சீனாவில்  தொடங்கி உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்த கொரோனா தொற்று பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெர்மனி சீனாவிற்கு பில் ஒன்றை அனுப்பி உங்களால் எங்களுக்கு 149 பில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,24,10,91,33,09,800) நஷ்டம் என்று கூறியுள்ளது.

அதோடு அந்த பில்லில் திரைப்படத்துறையில் ஏற்பட்ட இழப்பிற்கு 72 பில்லியன் யூரோக்கள், சுற்றுலா இழப்பிற்கு 27 பில்லியன் யூரோக்கள், தொழில் துறையில் ஏற்பட்ட இழப்பிற்கு 50 பில்லியன் யூரோக்கள், விமான சேவையில் ஏற்பட்ட இழப்பிற்கு ஒரு பில்லியன் யூரோக்கள் என மொத்தம் 149 பில்லியன் யூரோக்களை சீனா தங்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

ஜெர்மனியின் இந்த செய்கையினால் ஆத்திரமடைந்த சீனா இது அயல்நாட்டின் வெறுப்பையும் தேசியவாதத்தை தூண்டும் விதமான செயல் என விமர்சனம் செய்துள்ளது.

Categories

Tech |